search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் இடமாற்றம்"

    கஞ்சா வாங்க போலீசாருக்கு உத்தரவிட்டு வியாபாரியுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சர்க்கரைபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 39)., காட்டு ராஜா (35), கஞ்சா வியாபாரிகள். இதில் காட்டு ராஜா மீது வழக்கு பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் ஈஸ்வரனிடம் போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் 1.5 கிலோ கஞ்சாவை வாங்கி போலீஸ்காரர் ராஜா வீட்டில் பதுக்கி வைத்தனர்.

    இது குறித்து தனிப்படை இன்ஸ்பெக்டர் கண்ணன் புகாரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விசாரித்து ராஜேஷ் கண்ணனை கட்டுப்பாட்டு அறைக்கும், 3 போலீசாரை ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் கஞ்சா வாங்க போலீசாருக்கு உத்தரவிட்டு வியாபாரியுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ×